மணிரத்னத்தின் ரசிகன் ஆன நான், இந்த படத்திற்காக ஆவலாக காத்திருந்து முதல் ஷோ பார்த்தேன், உண்மையில் இந்த படம் எனக்கு இன்ப அதிர்ச்சி...
மணிரத்னதினால் இவ்வளவு மொக்கையாக படம் எடுக்க முடியுமா என்று....
ரொம்ப சாதாரணமான கதை தான், இரண்டு கிருத்துவர்கள், அரவிந்த்சாமி, அர்ஜுன்.. இதில் அரவிந்தசாமி நல்லவர், பாதிரியார் ஆகி, அநாதை சிறுவன் ஹீரோ கௌதம் கார்த்திக்கை எடுத்து வளர்த்துகிறார்.. கெட்டவர் அர்ஜுன் பழைய பகையை மனதில் கொண்டு, ஒரு பெண்ணை கெடுத்து பழி அரவிந்தசாமி மேல் விழும்படி செய்கிறார்.. இங்கு இடைவேளை.....
இதன் பின்பு அரவிந்தசாமி செய்யாத குற்றத்துக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கிறார், கௌதம் அர்ஜுன் உடன் சேர்ந்து கள்ளகடத்தல் என திசை மாறி போகிறார்..இடையில் கன்னியாஸ்திரி துளசி உடன் லவ்.. பின்பு அவளுக்காக கள்ள தொழிலை விட முடிவு செய்கிறார்.. அப்போது தான் தெரிகிறது, அவள் அர்ஜுன் மகள் என்று, பின்பு இவர்கள் லவ் தெரிந்து மகளை கொல்ல அர்ஜுன் துடிக்க, கௌதம் காப்பாற்ற.......... அப்பாடா வழக்கமான கிளைமாக்ஸ் ............
படத்தின் நிஜமான ஹீரோ அரவிந்தசாமி தான், மனிதர் முதல் பாதியில் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பில சிறிது நேரம் நம்மை கட்டிபோடுகிறார்..
அதன் பின்பு வழவழ கொழகொழ கதையில் அவருக்கும் வேலை இல்லாமல் போகிறது.. அர்ஜுன் "நான் சைத்தான், சைத்தான் என்று சொல்லிக்கொண்டு வில்லத்தனம் என்று ஏதோ செய்துவிட்டு, கிளைமாக்ஸ் இல் ஹீரோவிடம் அடி வாங்கி, திருந்துகிறார்.. ஹீரோ கௌதம் கார்த்திக் ஆடுகிறார், பாடுகிறார், ஓரளவு நடிக்கிறார், but என்னமோ மிஸ் ஆகுது அவருகிட்ட .. கார்த்திக்கிட்ட இருந்த அந்த ஒரு துறுதுறுப்பு மிஸ்ஸிங்....
நாயகி "துளசி நாயர்"..15 வயசு பொண்ண இது ? ஆன்ட்டி மாதிரி இருக்கு.. சுத்தமா நடிப்பு சுட்டு போட்டாலும் வரலை.... ராதா பொண்ணன்னு கேக்க வைக்குது..குறிப்பா அந்த காதல் காட்சிகள், பயங்கர எரிச்சல், கொஞ்சம் கூட ஒரு feel இல்லாம, ஸ்கூல் டிராமா மாதிரி இருக்கு... பொன்வண்ணன் படத்துல இருக்கார்..
இந்த கதைக்கு இதுவே ஜாஸ்தின்னு ரஹ்மான் நினைத்து விட்டார் போல.. பின்னணி இசை ரொம்ப சுமார், பாடல்கள் கூட.. ராஜீவ் மேனனின் கேமரா ரொம்ப உழைத்து இருக்கிறது.. காட்சிகள் "Visual Treat".. வசனம் ஜெயமோகன ?
ஒரு வசனம் கூட ஒரு ஈர்ப்பா இல்லை.. படத்துல்ல அர்ஜுன் பாவம் ...பாவம் என்று ஒரு வசனம் பேசுகிறார் ...யாரு படத்துக்கு வந்தவங்களா ? என்று கேட்க தோன்றுகிறது...... திரைக்கதை சுத்தி சுத்தி அடிக்குதுடா சாமி....
மொத்ததில் இந்த மணிரத்னத்தின் கடலில் அலையும் இல்லை, ஆழமும் இல்லை...
My Rating: 2 / 5
எதிர்பார்க்கும் விகடன் மார்க்: 39 / 100




No comments:
Post a Comment